COURTESY: http://tamil.oneindia.in/news/2013/03/18/india-india-sri-lanka-defence-takls-cancel-171762.html Updated: Monday, March 18, 2013, 19:27 [IST]
டெல்லி: தமிழகத்தில் தமிழீழம் கோரி மாணவர்கள் பேரெழுச்சியாக தொடர்
போராட்டங்களை நடத்தி வருவதைத் தொடர்ந்து இலங்கையுடன் இந்தியா அடுத்த வாரம்
நடத்த இருந்த பேச்சுவார்த்தையை மத்திய அரசு திடீரென ரத்து செய்திருக்கிறது.
இந்தியா- இலங்கை இடையே வரும் 23-ந் தேதி பாதுகாப்புத் துறை செயலாளர்கள்
நிலையிலான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில்
மிகப் பெரும் கொந்தளிப்பான சூழ்நிலையாக மாணவர்கள் போராட்டம் உச்சகட்டத்தை
அடைந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து இலங்கையுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்ய மத்திய அரசு
முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment